கண்களை வருடும் தேனிசையே, வருடாமல் போனால் நியாயம் உண்டோ... வருடியதால் ஒரு காயம் உண்டோ... வின்களை ஒளிரும் வெண்ணிலவே, வந்தால் பௌர்ணமி ஒளிர்வதுண...
கண்களை வருடும் தேனிசையே,
வருடாமல் போனால் நியாயம் உண்டோ...
வருடியதால் ஒரு காயம் உண்டோ...
வின்களை ஒளிரும் வெண்ணிலவே,
வந்தால் பௌர்ணமி ஒளிர்வதுண்டோ...
வாரமல் பேருநிலம் இருள்வதுண்டோ....
பூக்கள் கொண்ட தேன்துளியே,
தேனி வரும் என காத்ததுண்டோ....,
வாராமல் உதிர்தால் உபாயமுண்டோ...
மண்ணில் தோன்றும் மரக்கிலையே,
இலை உதிர்வதை எண்ணி அழுவதுண்டோ....
செடி துளிற்பதை எண்ணி சிரிப்பதுண்டோ....
உணர்ச்சிகள் இல்லா ஜடபொருளும்,
தன் அடையாளம் மாற்றிக்கொள்வதில்லை...
அடையாளம் கொண்ட ஜீவன் இங்கே உணர்ச்சியை புரிந்துகொள்வதில்லை...
தொட்டு செல்லும் காற்று,
தான் இங்கே என்று சொல்வதில்லை...
விட்டு செல்லும் எப்பொருளும் மீண்டும் ஒட்டிக்கொள்ளும் என்று நினைப்பதில்லை...
கட்டிகொள்ள நான் உண்டு என்னாலும் என தலையணையும்,
ஒட்டிக்கொள்ள நான் உண்டு என இரவுகளும்,
முத்தம் வைக்க நான் இருக்கேன் என தந்நிழலும்....
அழுதாலும் துடிக்கின்ற கைக்குட்டை...
சிரித்தாலும் மறைக்கட்டும் என எண்ணாதோ...
விண்ணை முட்டும் நாள் வருமோ,
இல்லை மண்ணை விட்டும் நாள் வருமோ....
கண்ணை சிமிட்டும் நொடியும், கண்ணை சிமிட்டா நொடியும் வாழ்வில் எத்தனை வந்தாலும்....
கை தூக்க நேரம் வாராமல் கண்ணை முடிவிட மாட்டேன் கண்மணியே......